மணல் கொள்ளையர்களை எதிர்த்துப் போராடி வந்த சமூக செயற்பாட்டாளர் விசுவநாதன் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: முகிலனுக்குத் துணையாக நின்று கரூர் பகுதியில் மணல் கொள்ளையர்களை எதிர்த்துப் போராடி வந்த விசுவநாதன் மீது பொய் வழக்கு ஒன்றைப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ள காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன். விசுவநாதனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.