சென்னை வளசரவாக்கத்தில் மருத்துவர் வீட்டில் 150 பவுன் நகைகள் திருடு போனது.
வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் 2-ஆவது பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஆயுர்வேத மருத்துவர் தங்கத்துரை. இவர் 6 மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்தார். இந்நிலையில், தங்கத்துரை செவ்வாய்க்கிழமை சென்னை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 150 பவுன் நகைகள் திருடு போனதை அறிந்தார். இது குறித்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.