பெட்ரோல் பங்கில் ரூ.20 ஆயிரம் திருட்டு

சென்னை, மயிலாப்பூரில் பெட்ரோல் பங்க் ஊழியர்களை மிரட்டி ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.



சென்னை, மயிலாப்பூரில் பெட்ரோல் பங்க் ஊழியர்களை மிரட்டி ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பங்கின் ஊழியர்கள் பலராமன், சுகுமார் ஆகியோர் புதன்கிழமை பணியில் இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம  நபர்கள் இருவர்  பலராமன், சுகுமாரை மிரட்டி ரூ.20 ஆயிரத்தைப் பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில், ராயப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com