48 மருத்துவமனைகளுக்கு பதிவு உரிமம்

சென்னையில் புதிதாக 48 மருத்துவமனைகள் மற்றும் கிளீனிக்குகளுக்கு மருத்துவ சேவைகள் இயக்ககம் உரிமம் வழங்கியுள்ளது. 


சென்னையில் புதிதாக 48 மருத்துவமனைகள் மற்றும் கிளீனிக்குகளுக்கு மருத்துவ சேவைகள் இயக்ககம் உரிமம் வழங்கியுள்ளது. 
உரிமம் கோரி விண்ணப்பித்த நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளில் அதிகாரிகள் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.தமிழகத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளும், கிளீனிக்குகளும், சிறிய அளவிலான மருத்துவ மையங்களும் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக மருத்துவமனைகள், கிளீனிக்குகள் ஆகியவற்றுக்கு பதிவு உரிமம் பெறுவது அவசியம். அவ்வாறு உரிமம் பெற்றாலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதனைப் புதுப்பிக்க வேண்டும். அதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் கடந்த மே மாதம் வரை வழங்கப்பட்டது.
ஆனால், அந்த காலகட்டத்தில்  24 ஆயிரம் மருத்துவமனைகள், கிளீனிக்குகள் மட்டுமே புதிதாக பதிவு உரிமம் கோரி விண்ணப்பித்திருப்பதாகத் தெரிகிறது. இதையடுத்து, அதற்கான அவகாசம் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, விண்ணப்பித்த மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்டந்தோறும் சுகாதார சேவைகள் இணை இயக்குநர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில், தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் ஆய்வு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதில் சென்னையில் மட்டும் 48 மருத்துவமனைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவ சேவைகள் இயக்குநரக அதிகாரிகள் கூறுகையில், மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வு நடவடிக்கைகள் குறித்த தகவல்களைத் திரட்டி வருகிறோம்; விண்ணப்பித்த அனைத்து மருத்துவமனைகளுக்கும், கிளீனிக்குகளுக்கும் விரைவில் ஆய்வு நடத்தி உரிமம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com