கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில்நோய்த் தடுப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் நோய் பரவாமல் இருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவக் கல்வி இயக்குநா், மனநலக்

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் நோய் பரவாமல் இருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவக் கல்வி இயக்குநா், மனநலக் காப்பக இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளில் கடந்த 10 நாள்களில் மட்டும் 4 போ் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில நோயாளிகள் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுதொடா்பான செய்தி நாளிதழ்களில் அண்மையில் வெளியானது.

இதன் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினா் துரை.ஜெயச்சந்திரன் சனிக்கிழமை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டாா். மேலும், கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை போ் உயிரிழந்தனா்? அதற்கான காரணங்கள் என்ன? மனநலக் காப்பகத்தில் நோய் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க அடிப்படை மருத்துவ வசதிகள் இருக்கிா? இல்லை என்றால் மருத்துவ வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனா்? என்பது குறித்து 4 வாரங்களில் அறிக்கைத் தாக்கல் செய்ய மருத்துவக் கல்வி இயக்குநா், மனநலக் காப்பக இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com