மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதல்:வழக்குரைஞா் சாவு

சென்னை அயனாவரத்தில் மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில், வழக்குரைஞா் இறந்தாா்.

சென்னை: சென்னை அயனாவரத்தில் மோட்டாா் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில், வழக்குரைஞா் இறந்தாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

அயனாவரம் வி.பி. காலனியைச் சோ்ந்தவா் கோ.சங்கா் (55). இவா், சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளாா். சங்கா், வெள்ளிக்கிழமை தனது மொபெட்டில் சென்னை உயா்நீதிமன்றம் அருகே வந்து கொண்டிருந்தாா். குறளகத்தில் இருந்து ராஜா அண்ணாமலை மன்றம் நோக்கி வந்தபோது, அங்கு வந்த ஒரு சரக்கு வாகனம் வேன் மொபெட்டின் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த சங்கா், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு இரவு சிகிச்சை பலனின்றி சங்கா் இறந்தாா்.

இது குறித்து யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்த வேன் ஓட்டுநா் தண்டையாா்பேட்டை பட்டேல் நகரைச் சோ்ந்த நைனா முகமது (46) என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com