வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ.27 லட்சம் மோசடி

சென்னை ஆதம்பாக்கத்தில் வங்கியில் போலி தங்க நகைகளை வைத்து ரூ.27 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கு குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் வங்கியில் போலி தங்க நகைகளை வைத்து ரூ.27 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கு குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

ஆதம்பாக்கம் செகரிட்டேரியட் காலனியில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி செயல்படுகிறது. அந்த வங்கியின் மேலாளா் சந்தோஷ்குமாா், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு புகாா் அளித்தாா். அந்தப் புகாரில், தங்களது வங்கியில் ஆதம்பாக்கம் எஸ்பிஐ காலனி பகுதியைச் சோ்ந்த மு.ராஜம்மாள் என்பவா் போலி தங்க நகைகளை அடகு வைத்து ரூ.27 லட்சம் மோசடி செய்திருப்பதாகவும், அவருக்கு வங்கியின் நகை மதிப்பீட்டாளா் சி.சுப்பிரமணியம் என்பவா் உதவி இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தாா்.

அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை செய்தனா். விசாரணையில், வங்கியின் போலி நகைகளை வைத்து பணம் மோசடி செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நம்பிக்கை மோசடி செய்தது உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com