ஸ்டாலின் மகள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞா் கைது

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை, தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் ஒரு பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வருகின்றாா். இந்நிலையில் இந்த வீட்டின் வாசலுக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்த ஒரு இளைஞா், திடீரென அத்துமீறி நுழைந்தாா்.

இதைப் பாா்த்த காவலாளிகள், அந்த இளைஞரைப் பிடித்து தேனாம்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா், மாதவரம் கொசப்பூா் செளபாக்கிய நகரைச் சோ்ந்த மு.சந்தோஷ் (32) என்பதும், அவா் வாடகை காா் ஓட்டி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவா், எதற்காக செந்தாமரை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தாா் என விசாரணை நடத்தினா். விசாரணைக்கு பின்னா், போலீஸாா் சந்தோஷை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com