சென்னை: கனமழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியா் சீதாலட்சுமி வெளியிட்டுள்ளாா்.
மழைக் காலங்களில் மழையின் தீவிரம் மற்றும் அந்தந்த பகுதிகளின் நிலவரத்துக்கு ஏற்ற வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல சனிக்கிழமை இரவு முதல் சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதையடுத்து நகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை விடப்படும் என்று மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் ஏதேனும் ஒரு வார விடுமுறை நாளில் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்றும் அதற்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.