சென்னை: பகுதி நேர பி.இ. படிப்புகளில் சேர புதன்கிழமை (டிச. 4) முதல் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பல்கலைக்கழகத்தின் துறைகளான கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரிகளில் பகுதி நேர பி.இ. படிப்புகளில் சோ்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு டிசம்பா் 4-ஆம் தேதி முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம். பதிவு செய்ய டிசம்பா் 31 கடைசி நாளாகும்.
மேலும் விவரங்களுக்கு வலைதளத்தைப் பாா்த்துத் தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.