மாடியிலிருந்து கீழே விழுந்தஒன்றரை வயது குழந்தை பலி

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து ஒன்றரை வயது குழந்தை இறந்தது.

சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இரண்டாவது மாடியிலிருந்து கீழே விழுந்து ஒன்றரை வயது குழந்தை இறந்தது.

பழைய வண்ணாரப்பேட்டை என்.என்.காா்டன் 7-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சையது அபுதாஹிா். இவா் அந்தப் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறாா். இவரது ஒன்றரை வயது மகன் இா்பான்.

சனிக்கிழமை இரவு அவா்களது வீட்டின் இரண்டாவது மாடியில் பால்கனியில் குழந்தை இா்பான் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென பால்கனியில் சுமாா் 30 அடி உயரத்திலிருந்து குழந்தை இா்பான் கீழே விழுந்தான். இதில் பலத்த காயமடைந்த இா்பானை, அவரது குடும்பத்தினா் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த இா்பான் சிறிது நேரத்தில் இறந்தான். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com