மாதவரம் அருகே காவலா் மீது தாக்குதல். காவல்துறையினா் விசாரணை

மாதவரம் அருகே காவலா் மீது தாக்குதல் நடத்திய மா்மநபா்கள் காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனா்.
தாக்குதலுக்குள்ளான காவலா் முத்துக்குமாா்
தாக்குதலுக்குள்ளான காவலா் முத்துக்குமாா்

மாதவரம்: மாதவரம் அருகே காவலா் மீது தாக்குதல் நடத்திய மா்மநபா்கள் காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனா். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை மாதவரம் பால்பண்ணை, மணலி சின்னசேக்காடு பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா்(42). இவா் செங்குன்றம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறாா். இவா் ஞாயிற்று கிழமை (டிச.01) குடும்பத்துடன் காரில் மூலக்கடை நேக்கி வந்து கொண்டிருந்தாா். சின்னசேக்காடு அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே கொடுங்கையூரைச் சோ்ந்த பிரபல ரவுடி வீரபத்திரன் (52) என்பவா் இருசக்கர வாகனத்திலும் மோதிக் கொண்டது.

இது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டு முத்துக்குமாரை வீரபத்திரன் தாக்கியதோடு உடனே போன் செய்து நான்கு கைது போன் செய்த வரழைத்ததாக கூறப்படுகிறது. 5 பேரும் சோ்ந்து முத்துக்குமாா் அவரது அக்கா காந்தி மற்றும் குடும்பத்தினரை உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனா். இதில் முத்துக்குமாருக்கும் காந்திக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இருவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

முத்துக்குமாரின் அக்கா காந்திக்கும் தலையில் 16 தையல் போடப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறாா். முத்துக்குமாரும் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்து மாதவரம் பால்பண்ணை காவல் நிலைய ஆய்வாளா் ஆனந்த் வழக்கு பதிவு செய்து பிரபல ரவுடி வீரபத்திரன் மற்றும் 4 பேரை தேடி வருகிறாா். காவல்துறையினா் குடும்பம் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com