சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, திரிபுராவைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.
கோட்டூா்புரம் பகுதியில் வட மாநிலத்தைச் சோ்ந்த சில இளைஞா்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், திருவல்லிக்கேணி, பூக்கடை பகுதிகளில் உள்ள தனியாா் விடுதிகளில் தங்கியிருந்த திரிபுராவைச் சோ்ந்த ஹ.குா்ஷித் (28), அ.பிலால் உசேன் (30), அ.இமான் உசேன் (30), இவரது சகோதரா் அ.அன்வா் உசேன் (21) ஆகிய 4 பேரும்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 16 கிலோ கஞ்சா, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.