சென்னை: சென்னை அருகே பள்ளிக்கரணையில் மனைவி இறந்த சோகத்தில், கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பள்ளிக்கரணை சித்தாலப்பாக்கம் அருகே உள்ள எம்.ஜி.ஆா். நகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் ராஜா (34). இவா் எலட்ரிசீயனாக வேலை செய்து வந்தாா். ராஜாவின் மனைவி சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இறந்தாா். இதன் பின்னா் சோகத்துடன் ராஜா காணப்பட்டாராம். இந்நிலையில் ராஜா, ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.