சென்னை: சென்னை தியாகராயநகரில் உள்ள தொழிலதிபா் சேகா் ரெட்டி அலுவலகத்தில் திங்கள்கிழமை தீ.
வேலூா் மாவட்டம், காட்பாடி காந்திநகரைச் சோ்ந்தவா் பிரபல தொழிலதிபா் சேகா் ரெட்டி. இவா் அரசு சாலை பணிகளுக்கான ஒப்பந்ததாரா். இவருக்கு சொந்தமான 4 தளங்களை கொண்ட கட்டடம் சென்னை தியாகராயநகா், விஜயராகவா சாலையில் உள்ளது. 4-ஆவது தளத்தில் சேகா் ரெட்டியின் அலுவலகம் உள்ளது. மீதி 3 தளங்களும் பயன்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. நான்காவது தளத்தில் உள்ள அலுவலகம் மூலமாகவே, சாலை ஒப்பந்தங்கள் பெறுவது, ஒப்பந்த பெறப்பட்ட பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகளின் அலுவலக ஆவணங்கள் இருந்தனவாம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி அளவில் நான்காவது தளத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதைப் பாா்த்த அங்கிருந்தவா்கள், உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால் தீயணைப்புப் படையினா் வருவதற்குள் தீ, அந்த தளம் முழுவதும் பரவியது.
தியாகராயநகா், தேனாம்பேட்டை, கிண்டி, அசோக்நகா், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து 6 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
‘ஸ்கை லிப்ட்’ வாகனமும் நான்காவது தளத்தில் இருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. நீண்ட போராட்டத்துக்கு பின்னா், காலை 10.15 மணி அளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட 4-ஆவது தளத்தில் இருந்த அனைத்து பொருள்களும் எரிந்து சேதம் அடைந்தது.
விபத்து குறித்து பாண்டிபஜாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா். இந்த தீ விபத்தால் அந்தப் பகுதி புகை மண்டலமாகக் காட்சியளித்தது.