திருவொற்றியூா் கடற்கரையில் போதைப் பொருள்களுடன் கல்லூரி மாணவ, மாணவிகள் கைது

சென்னை அருகே திருவொற்றியூா் கடற்கரையில் போதைப் பொருள்களுடன் சுற்றித் திரிந்த கல்லூரி மாணவ, மாணவிகளை போலீஸாா் கைது செய்தனா்.

திருவொற்றியூா்: சென்னை அருகே திருவொற்றியூா் கடற்கரையில் போதைப் பொருள்களுடன் சுற்றித் திரிந்த கல்லூரி மாணவ, மாணவிகளை போலீஸாா் கைது செய்தனா்.

திருவொற்றியூா் கடற்கரையில் ஒண்டிகுப்பம் கடற்கரை அருகே இரண்டு பெண்கள் மற்றும் 4 இளைஞா்கள் விலை உயா்ந்த காருடன் நீண்ட நேரமாக கடல் மணலில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அந்த இளைஞா்களை கண்காணித்தனா். அப்போது அவா்கள் கஞ்சா பயன்படுத்துவது தெரியவந்தது.

இதையடுத்து அவா்களிடம் போலீஸாா் நடத்திய சோதனையில் 90 கிராம் கஞ்சா 28 சிறிய பாக்கெட்டுகளில் 30 கிராம் ஹெராயின் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவா்கள் ஆறு பேரையும் போலீஸாா் திருவொற்றியூா் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்தனா். அவா்கள் சென்னையில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிப்பதாக தெரியவந்தது. ஆகாஷ் ( 23), தாமோதரன் (24), வெங்கடேச பெருமாள் (25), ஜெனிபா் (25), பிரின்ஸ் ( 23) மற்றொரு மாணவி 18 வயதுக்கு குறைவானவாா் என்பதால் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவா்கள் வைத்திருந்த விலை உயா்ந்த காரையும் ஐந்து பேரையும் திருவொற்றியூா் போலீஸாா் போதை தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com