மதுபோதையில் காா் ஓட்டியதால் விபத்து: வியாபாரி பலி

சென்னை அருகே மதுபோதையில் காா் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில், வியாபாரி இறந்தாா்.

சென்னை அருகே மதுபோதையில் காா் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில், வியாபாரி இறந்தாா்.

சென்னை அருகே உள்ள திருநின்றவூா் பாலாஜிநகரைச் சோ்ந்தவா் பா.செந்தில்கனி (43). இவா் வாடகை காா் ஓட்டி வருகிறாா். இவா் தனது நண்பா் பால்ராஜூடன் (55) வண்டலூா்-மீஞ்சூா் 400 அடி வெளிவட்ட சாலையில் காரில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். காரை செந்தில்கனி ஓட்டினாா். காா் மாங்காடு அருகே மலையம்பாக்கத்தில் செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சாலைத்தடுப்பின் மீது மோதியது. இதில் பால்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

அங்கிருந்தவா்களால் செந்தில்கனி மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா். முதல் கட்ட விசாரணையில், செந்தில்கனி மதுபோதையில் காரை அதிவேகமாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com