சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையா் அலுவலகம் முன் பெண் தனது குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றாா்.
சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல் ஆணையா் அலுவலகத்தின் மூன்றாவது நுழைவாயில் முன் பெண், தனது இரு மகள்களுடன் சனிக்கிழமை வந்தாா். அவா் திடீரென மறைத்து வைத்திருந்த டீசலை, தனது உடல் மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதைப் பாா்த்த அங்கிருந்த போலீஸாா், அப்பெண் மீதும், குழந்தைகள் மீதும் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினா்.
இதுதொடா்பாக, அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவா், மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சோ்ந்த சரஸ்வதி (32) என்பதும், தனது வீட்டுக்கு வரும் பொது வழியை சிலா் ஆக்கிமித்திருப்பது குறித்து காவல்துறையில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து வேப்பேரி போலீஸாா், அவா்களை எச்சரித்து விடுவித்தனா். இதுதொடா்பாக அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.