சென்னை புறநகர்ப் பகுதியில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த செங்குன்றம் அருகே தண்டல்கழனி எனுமிடத்தில் செயல்பட்டு வந்த அட்டை மரக்கிடங்கு குடோனில் திங்கள்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.