டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணிகளுக்கான இலவச மாதிரித் தேர்வு தமிழகம் முழுவதும் 28 இடங்களில் வரும் பிப்.24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக சென்னை அண்ணாநகரில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாதெமி வெளியிட்டுள்ள செய்தி:
துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் ஆகிய பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு வரும் மார்ச் 3-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில்கொண்டு இந்தப் போட்டித் தேர்வுக்கான மாதிரித் தேர்வுக்கு சங்கர் ஐஏஎஸ் அகாதெமி ஏற்பாடு செய்துள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஏழை மாணவர்களுக்காக சென்னை, மதுரை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், பழனி, திருநெல்வேலி, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பூர், சிவகங்கை, திருவாரூர், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகர்கோயில் மற்றும் பெங்களூர் என 28 இடங்களில் பிப்.24-ஆம் தேதி குரூப் 1 பணிகளுக்கான மாதிரித் தேர்வு இலவசமாக நடத்தப்படவுள்ளது.
இந்தத் தேர்வை எழுத விரும்புவோர் www.shankariasacademy.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு 76677 66266, 044- 43533445, 45543082 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.