சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 15 இடங்களில் அமைந்துள்ள பகுதி அலுவலகங்களில் குறைதீர் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை குடிநீர் வாரியம் சார்பில், மாதந்தோறும் 2-ஆவது சனிக்கிழமைகளில் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்துக்கான குறைதீர் கூட்டம் 15 இடங்களில் அமைந்துள்ள பகுதி அலுவலகங்களில் சனிக்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடை பெறும். இதில் பொதுமக்கள் பங்கேற்று, குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான பிரச்னைகள், நிலுவையில் உள்ள குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் தொடர்பாக புகார் தெரிவிக்கலாம். சந்தேகங்களையும் கேட்கலாம்.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் குடிநீர், கழிவுநீர் தொடர்பாக 34 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 17 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 17 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.