சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
சென்னை நெற்குன்றம் சி.கே.மாணிக்கம் சாலை பகுதியை சேர்ந்தவர் சயீத் கலில் (36). நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னையால் பாதிக்கப்பட்ட சயீத் கலில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அண்மையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மருத்துவமனையின் மேல் தளத்தில் இருந்து குதித்ததாகத் தெரிகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சயீத் கலில் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்றும், மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. போதைப் பழக்கத்தை கைவிடுவதற்காக அளிக்கப்பட்ட சிகிச்சைகளுக்கு அவர் ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது.
குடியை மறக்க இயலாமல் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.