ஆக.17,18-இல் மின்கம்பியாளர் தகுதிகாண் தேர்வு: விண்ணப்பிக்க ஜூலை 26 கடைசி

மின் கம்பியாளர் தகுதிகாண் தேர்வுக்கு ஜூலை 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் கம்பியாளர் தகுதிகாண் தேர்வுக்கு ஜூலை 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: வரும் ஆகஸ்ட் மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் மின்கம்பியாளர் தகுதிகாண் தேர்வு (ஜ்ண்ழ்ங்ம்ஹய் ட்ங்ப்ல்ங்ழ் ஸ்ரீர்ம்ல்ங்ற்ங்ய்ஸ்ரீஹ் ங்ஷ்ஹம்ண்ய்ஹற்ண்ர்ய்) நடைபெற உள்ளது. இதற்கு தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் மின்கம்பியாளர் பிரிவில் பயிற்சி பெற்று தேறியவர்கள் மற்றும் தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளர், கம்பியாளர் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர், மின் ஒயரிங் தொழிலில் 5 வருடங்களுக்குக் குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், 21 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இருந்து ரூ.10 வழங்கி பெற்றுக் கொள்ளலாம். அதே போல் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் தமிழக மாவட்டங்களின் தலைநகரங்களில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையத்தைத் தேர்வு மையமாக, விண்ணப்பதாரரே தேர்ந்தெடுத்து அங்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஜூலை 26-ஆம் தேதி என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com