தமிழகத்தில் வரும் ஜூலை 8-ஆம் தேதி தொடங்கவிருந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வேலூர் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை ஒத்திவைத்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பணியிடமாறுதல் கலந்தாய்வு காலாண்டு தேர்வு விடுமுறையில் நடைபெறும் என அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.