பேருந்து மோதியதில் இளைஞர் சாவு

மேடவாக்கத்தில் அரசு பேருந்து மோதி இளைஞர் இறந்தார்.


மேடவாக்கத்தில் அரசு பேருந்து மோதி இளைஞர் இறந்தார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது அஜ்மல் (19). இவர் சென்னை அருகே மேடவாக்கத்தில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அஜ்மல் புதன்கிழமை அதிகாலை மோட்டார் சைக்கிளில் மேடவாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வந்த கோயம்பேடு நோக்கி செல்லும் அரசு பேருந்து அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியதில்  கீழே விழுந்து பலத்தக் காயமடைந்த அஜ்மலை இறந்தார். இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த பேருந்தின் ஓட்டுநர் விழுப்புரத்தைச் சேர்ந்த வெங்கடேசனை (38) கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com