மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

சென்னை மந்தவெளி குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கு.தினேஷ் ஜெயம் (28), கூலித் தொழிலாளி.

சென்னை மந்தவெளி குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கு.தினேஷ் ஜெயம் (28), கூலித் தொழிலாளி. இந்நிலையில் தினேஷ் ஜெயம், நன்மங்கலம் அஸ்தினாபுரம் சாலையில் உள்ள மின் கம்பங்களில் ஒரு கட்டுமான நிறுவனத்தின் விளம்பர பதாகைகளை வைக்கும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தார். அவர் ஒரு மின் கம்பத்தின் மீது ஏறி விளம்பர பதாகையை வைக்கும்போது, அவரது கை அங்கு சென்ற மின் கம்பியில் பட்டுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த அவர் சிறிது நேரத்தில் இறந்தார். இது குறித்து பள்ளிக்காரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடக்கி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com