சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் உள்ள அரியவகை புலிக்குட்டிகளை ஆன்லைனில் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கு பராமரிக்கப்பட்டு வரும் நம்ருதா என்ற பெண் புலிக்கும், நகுலா என்ற ஆண் புலிக்கும் கடந்த ஜனவரி மாதம் அரிய வகையிலான இரண்டு கரும்புலிக் குட்டிகளும், ஒரு வெள்ளைப் புலிக்குட்டியும் பிறந்தன. கடந்த ஏப்ரல் 20-இல் பொதுமக்களின் பார்வைக்கு விடப்பட்ட இந்தப் புலிக்குட்டிகளை www.aazp.in என்ற இணையதளம் மூலமாக பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளை பூங்கா நிர்வாகம் செய்துள்ளது.