ஊதிய உயர்வு, பணியிட நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புறநோயாளிகள் சிகிச்சையை இரண்டு மணி நேரம் புறக்கணித்து அரசு மருத்துவர்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களின் பணியிடங்களைக் குறைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த சில நாள்களாக அடையாளப் போராட்டங்களை முன்னெடுத்தோம். இந்தச் சூழலில், சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுகாதாரத் துறை மானிய கோரிக்கையில் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் சில அறிவிப்புகள் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்த்தோம். ஆனால், அதிலும் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.இதையடுத்தே அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சையை 2 மணி நேரம் புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.