சென்னை-கூடூர் பிரிவில் சூலூர் பேட்டை-பொலிரெட்டிபட்டி இடையே தண்டவாளப் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (ஜூலை 27) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள ரயில்கள்: சூலூர் பேட்டை- நெல்லூர் இடையே காலை 8 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இதுபோல, நெல்லூர் -சூலூர்பேட்டைக்கு காலை 10 மணிக்கு இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது. மூர்மார்க்கெட் வளாகம்-சூலூர்பேட்டைக்கு காலை 5.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. சூலூர்பேட்டை -மூர்மார்க்கெட் வளாகத்துக்கு நண்பகல் 12.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. ஆவடி- மூர்மார்க்கெட் வளாகத்திற்கு அதிகாலை 4.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது. அகமதாபாத் -சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரலுக்கு இயக்கப்படும் நவஜீவன் விரைவு ரயில் பொலிரெட்டிபட்டியில் 80 நிமிஷம் நின்று செல்லும்.
இதுபோல சில ரயில்கள் சென்ட்ரல் நிலையத்தை தாமதமாக வந்தடையும் என்று தெற்கு ரயில்வேயின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.