தேசிய தரவரிசையில் சென்னைப் பல்கலை. முன்னேற்றம்

தேசிய தரவரிசையில் 2 ஆண்டுகளுக்கு முன் 41-ஆவது இடத்தில் இருந்த சென்னைப் பல்கலைக்கழகம் தற்போது முதல் 20 இடங்களுக்குள் முன்னேறியிருப்பதாக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

தேசிய தரவரிசையில் 2 ஆண்டுகளுக்கு முன் 41-ஆவது இடத்தில் இருந்த சென்னைப் பல்கலைக்கழகம் தற்போது முதல் 20 இடங்களுக்குள் முன்னேறியிருப்பதாக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
 மேலும் அவர் கூறுகையில், ''பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவோர் மற்றும் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மண்டலம் அமைக்க மத்திய அரசிடம் ரூ. 15 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களின் சிறப்பான செயல்பாட்டுக்காக, பிழைகளைக் கண்டறிதல் மற்றும் உண்மைத்தன்மை பரிசோதிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் 50 சதவீத பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், பல்கலைக்கழக மானியக்குழு உள்ளிட்ட அமைப்புகளிடம் நிதி பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. தமிழக அரசுடன் ஆலோசித்து பேராசிரியர்கள் நியமனம் மற்றும் நிதிப்பற்றாக்குறைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com