அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியில் ஓட்டுநர் பணியிடம்: மார்ச் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள ஓட்டுநர், அடிப்படைப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு மார்ச் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள ஓட்டுநர், அடிப்படைப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு மார்ச் 15-க்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட தகவல்:  அரும்பாக்கத்தில் உள்ள அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள 1 ஓட்டுநர் பணியிடத்துக்கு விண்ணப்பிப்போர் ஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.19,500. மேலும், காலியாக உள்ள 2  அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.15,700. 2 காவலர் பணியிடங்களுக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 3-ஆம் வகுப்பு அல்லது  8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு மருத்துவமனை பணியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிப்போர் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள், அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை (மார்ச் 6)  முதல் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 15-ஆம் தேதிக்குள்,  முதல்வர், அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை-6. என்ற முகவரிக்கு  அனுப்ப வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com