கடற்கரை-வேளச்சேரி இடையே பராமரிப்புப் பணி: மார்ச் 17-இல் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில் பராமரிப்புப் பணி நடக்கவுள்ளதால், ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை


சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் வழித்தடத்தில் பராமரிப்புப் பணி நடக்கவுள்ளதால், ரயில் சேவையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை-வேளச்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17)  காலை 7.50 முதல்  பிற்பகல் 2.35 மணி வரை நடைபெறவுள்ளது. 
இதன்காரணமாக, இரு மார்க்கத்திலும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கு காலை 8, 8.20, 8.40, 9.00, 9.20, 9.40, 9.50, 10.00, 10.20, 10.40, முற்பகல் 11, 11.20, 11.40, நண்பகல் 12, 12.20, 12.40, மதியம் 1, 1.20, 1.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. 
இதன்பிறகு, சென்னை கடற்கரை-வேளச்சேரிக்கு மதியம் 2 மணிக்கு முதல் மின்சார ரயில் புறப்பட்டுச் செல்லும்.
மறுமார்க்கமாக, வேளச்சேரி-சென்னை கடற்கரைக்கு காலை 8.10, 8.30, 8.50, 9.10, 9.30, 9.50, 10.10, 10.40, 10.50 முற்பகல் 11.10, 11.30, 11.50, நண்பகல் 12.10, 12.30, 12.50, மதியம் 1.10, 1.30, 1.50 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. 
இதன்பிறகு, வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 2.10 மணி முதல் மின்சார ரயில் புறப்பட்டு செல்லும். இந்தத் தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com