திருப்பூர், நாகை மக்களவைத் தொகுதிகளின் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள், மனிதநேயமக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவை சனிக்கிழமை சந்தித்து ஆதரவு கோரினர்.
இதுகுறித்து, மனிதநேய மக்கள் கட்சி வெளியிட்ட அறிக்கை: வருகிற மக்களவைத் தேர்தலில், திருப்பூர், நாகை ஆகிய தொகுதிகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில், திருப்பூர் தொகுதி வேட்பாளர் சுப்பராயன், நாகை தொகுதி வேட்பாளர் செல்வராஜ் ஆகியோர், சென்னை, மண்ணடியிலுள்ள மமக தலைமையகத்துக்குச்சென்று அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவை நேரில் சந்தித்து தேர்தலில் தங்களை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் உடனிருந்தாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.