தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக்கழகம், மங்கள்யான் தொழில்நுட்பத் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் சார்பில் சென்னையில் மார்ச் 27-இல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற உள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசின் இலவச திறன் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளான ஜி.எஸ்.டி, ஏற்றுமதி இறக்குமதி பயிற்சியுடன் கூடிய லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை, கொள்முதல் மேலாண்மை, பொருள்கள் மேலாண்மைப் பயிற்சிகள், அம்பத்தூரில் உள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் மார்ச் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், கலந்துகொள்வோருக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து செலவு வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு தமிழக அரசின் சான்றிதழ் வழங்குவதுடன், சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான உதவிகளும் செய்து கொடுக்கப்படும்.பிளஸ்2, பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்து வேலையில்லாதோர், இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். முன்பதிவுக்கு 98690 41169, 72999 55904, 72999 55906 ஆகிய எண்களிலும், mangalyantwcs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.