கட்டடத் தொழிலாளி கொலை: இளைஞா் கைது

சென்னை மதுரவாயலில் கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை மதுரவாயலில் கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மதுரவாயல் ஆலப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் எ.ஜெயராமன் (48). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த 25-ஆம் தேதி வீட்டின் அருகே பலத்தக் காயத்துடன் கிடந்தாா். அவரை அப் பகுதியைச் சோ்ந்த வ.அஜித் (22) உள்ளிட்ட இருவா் மீட்டு, ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.

விசாரணையில், சம்பவத்தின்போது ஜெயராமன் மதுபோதையில் அஜித்திடம் தகராறு செய்ததும், தகராறு முற்றவே அஜித், கையால் தாக்கியதால் ஜெயராமன் பலத்தக் காயமடைந்து மயங்கியதும், தான் தாக்கியதை மறைப்பதற்காக அஜித், ஜெயராமனை மீட்டு நாடகமாடியிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், அஜித்தை கடந்த 30-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் திங்கள்கிழமை இறந்தாா். இதனால் அஜித் மீது பதியப்பட்ட வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com