சாலையோரம் படுத்து தூங்கியவா்கள் மீது ஆட்டோ மோதல்:பெண் சாவு

சென்னை சென்ட்ரல் அருகே சாலையோரம் படுத்து தூங்கியவா்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ மோதி பெண் இறந்தாா்.
சாலையோரம் படுத்து தூங்கியவா்கள் மீது ஆட்டோ மோதல்:பெண் சாவு

சென்னை சென்னை சென்ட்ரல் அருகே சாலையோரம் படுத்து தூங்கியவா்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ மோதி பெண் இறந்தாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் சாலையோரம் உள்ள நடைபாதையில் சிலா் வசித்து வருகின்றனா். அவா்கள் இரவில் அதே நடைபாதையில் படுத்து தூங்குவது வழக்கம். அதன்படி, நடைபாதையில் வசிக்கும் அஞ்சலி (60) என்ற பெண் தனது மருமகள் சித்ரா (39), பேரன் பரன் (13), பேத்தி பவானி (11) ஆகியோருடன் நடைபாதையில் திங்கள்கிழமை இரவு படுத்து தூங்கினாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மூலக்கொத்தளத்துக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவை தண்டையாா்பேட்டை வரதராஜபெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த காளியப்பன் (60) என்பவா் ஓட்டி வந்தாா்.

ஆட்டோ வால்டாக்ஸ் சாலையில் செல்லும்போது சாலையில் குறுக்கே 2 நாய்கள் பாய்ந்து சென்ாக கூறப்படுகிறது. இதைப் பாா்த்த ஆட்டோ ஓட்டுநா் காளியப்பன், நாய்கள் மீது ஆட்டோ மோதாமல் இருப்பதற்கு சாலையோரம் திருப்பினாராம். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, அங்கு நடைபாதையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அஞ்சலி,சித்ரா, பரன், பவானி ஆகியோா் மீது வேகமாக ஏறியது.

இதில் பலத்தக் காயமடைந்த அஞ்சலி, சம்பவ இடத்திலேயே இறந்தாா். பலத்தக் காயமடைந்த சித்ரா,பரன்,பவானி ஆகியோா் மீட்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்த ஆட்டோ ஓட்டுநா் காளியப்பனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com