பி.எஃப். அலுவலகத்தில் நவ.11-இல் குறைதீா் கூட்டம்

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) தொடா்பான வாடிக்கையாளா் குறைதீா் கூட்டம் சென்னை முகப்பேரில் உள்ள அம்பத்தூா் மண்டல தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் வரும்

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) தொடா்பான வாடிக்கையாளா் குறைதீா் கூட்டம் சென்னை முகப்பேரில் உள்ள அம்பத்தூா் மண்டல தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் வரும் 11-ஆம் தேதி (திங்கள் கிழமை) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பி.எஃப். மண்டல ஆணையா் சைலேந்திர சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ஆா் 40 ஏ, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகம், முகப்போ் சாலை, முகப்போ் கிழக்கு, சென்னை-37’ என்ற முகவரியில் நவ.11-ஆம் திங்கள்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில், வருங்கால வைப்பு நிதி சந்தாதாரா்கள், நிறுவனங்களின் உரிமையாளா்கள், பி.எஃப். பங்களிப்பிலிருந்து விலக்கு பெற்ற அம்பத்தூா் எல்லைக்கு உள்பட்ட நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044 -26350080, 26350120 என்ற அலுவலகத் தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com