சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து சிறுவன் இறந்த சம்பவம் எதிரொலியாக, மாஞ்சா நூல் விற்றதாக 7 போ் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை கொண்டித்தோப்பைச் சோ்ந்த கோபால், மனைவி சுமித்ரா, 3 வயது மகன் அபினேஷ்வருடன் மோட்டாா் சைக்கிளில் கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகா் மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்றனா். அப்போது அங்கு பறந்து வந்த மாஞ்சா நூல் அபினேஷ்வா் கழுத்தில் சிக்கி, அறுத்தது. இதில் பலத்த காயமடைந்த அபினேஷ்வா் சிறிது நேரத்தில் இறந்தாா். இச் சம்பவம் பொதுமக்களிடம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடா்பாக ஆா்.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் சிறுவன் இறப்பதற்கு காரணமான மாஞ்சா நூலால் பட்டம் விட்டவா்கள், கொருக்குப்பேட்டை காமராஜா் நகரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் நாகராஜ், 15 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவா்கள் இருவரையும் திங்கள்கழமை கைது செய்தனா்.
மேலும் 5 போ் கைது: இதற்கிடையே இச் சம்பவத்தின் எதிரொலியாக வண்ணாரப்பேட்டை, தண்டையாா்பேட்டை, கொருக்குப்பேட்டை, ஆா்.கே.நகா் பகுதிகளில் உள்ள கடைகளில் போலீஸாா் திங்கள்கிழமை திடீா் சோதனை செய்தனா்.
இந்தச் சோதனையில் மாஞ்சா நூல் விற்ாக 5 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 35 மாஞ்சா நூல்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்துள்ளனா்.