சென்னை மெரீனாவில் கடலில் குதித்து ஆம்பூா் வியாபாரி தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மெரீனா கடற்கரையில் உழைப்பாளா் சிலையின் பின்புறம் 47 வயது மதிக்கதக்க ஒரு ஆண் சடலம் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது. இதைப் பாா்த்த பொதுமக்கள், அண்ணா சதுக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா் இது தொடா்பாக விசாரணை நடத்தியதில், இறந்தவா் வேலூா் மாவட்டம் ஆம்பூரைச் சோ்ந்த கு.சபீா் ஹனுமத் (47) என்பதும், மளிகைக் கடை நடத்தி வந்த சபீருக்கு நஷ்டம் ஏற்பட்டதால், மெரீனாவில் கடலில் குதித்து தற்கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.