நகைக் கடையில் திருட்டு: உ.பி.யைச் சோ்ந்த இருவா் கைது

சென்னை அண்ணாநகரில் பிரபல நகைக் கடையில் திருடிய வழக்கில், உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை அண்ணாநகரில் பிரபல நகைக் கடையில் திருடிய வழக்கில், உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

அண்ணாநகா் 2-ஆவது அவென்யூவில் பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் கடந்த மே மாதம் 11-ஆம் தேதி நகை வாங்குவதுபோல, 45 வயது மதிக்கத்தக்க 2 வட மாநிலத்தவா் வந்துள்ளனா்.

அவா்கள் நகைக்கடையில் நகை வாங்குவதுபோல் பாவனை செய்து, அங்கிருந்து 5 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றனராம். இது குறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

விசாரணையில், உத்தரப் பிரதேசம் கான்பூரைச் சோ்ந்த சோ.அமித்குமாா் (46), அா்ஜூன் நகரைச் சோ்ந்த ஹ.கணேஷ் சோனிசஸ் (47) ஆகியோா்தான் இத் திருட்டில் ஈடுபட்டவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவா்கள் இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com