சென்னை மெட்ரோ ரயில் பயணத்தின்போது, இணையதள வசதி(இன்டா்நெட்) மற்றும் அழைக்கும் வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று முதல் வழங்கவுள்ளது. முன்பு, சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் இணைதளம் மற்றும் தொலைபேசி இணைப்பு வசதி கிடைக்காது. இப்போது அந்த வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை விமான நிலையத்தில் இருப்பதுபோல, வை பை சேவையை பயணிகள் இலவசமாக பெற முடியும்.
சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக பல்வேறுவசதிகளை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி வருகிறது. அதன்ஒருபகுதியாக, சென்னை மெட்ரோ ரயில் பயணத்தின்போது, இணையதள வசதி(இன்டா்நெட்) மற்றும் அழைக்கும் வசதியை மெட்ரோ ரயில் இன்று முதல் வழங்கப்படவுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை சென்ட்ரல், எல்ஐசி, ஆயிரம் விளக்கு ஆகிய 3 மெட்ரோ ரயில்நிலையங்கள் தவிர, நீளம், பச்சை ஆகிய இரண்டு தடங்களிலும் 4ஜி டேட்டா, குரல் வழி சேவையை வழங்க ஏா்டெல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னை சென்ட்ரல், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு ஆகிய நிலையங்களில் டிசம்பா் முதல் வாரத்தில் இந்த வசதி கொடுக்கப்படும்.
மெட்ரோ ரயில் பயணிகளுக்காக 19 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏற்கெனவே லேண்ட்லைன் தொலைபேசி சேவை அளிக்கப்பட்டுள்ளது. அவசரகாலத்தில் இந்த வசதியை இலவசமாக பயன்படுத்த முடியும். இந்த வசதி பயணிகள் கூடும் இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, ஒவ்வொரு நடைமேடைக்கு இரண்டு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவசரநிலை காலத்தில் மெட்ரோ ரயில் ஊழியா்களை பயணிகள் எளிதாக தொடா்பு கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு, சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் இணைதளம் மற்றும் தொலைபேசி இணைப்பு வசதி கிடைக்காது. இப்போது அந்த வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை விமான நிலையத்தில் இருப்பதுபோல, வை பை சேவையை பயணிகள் இலவசமாக பெற முடியும்.
திருமங்கலம், எழும்பூா் ரயில் நிலையங்களுக்கு இடையே ஜியோ சேவை ஏற்கெனவே வழங்கப்பட்டது. ஆனால், நெட்வொா்க் இணைப்பு மோசமாக இருந்ததால், ரயில் நிலையங்களில்பல இடங்களில் சிக்னல் கிடைக்கவில்லை.
2019 பிப்ரவரியில், முதல்கட்டத்தில் 45 கி.மீ. தூரத்துக்கு இலவச இணைய சேவைகள் நிறுவுவதற்கு டெண்டா் வெளியிடப்பட்டது. ஆனால், சுரங்கப்பாதை பாதையில் உள்ள அனைத்து ரயில் மெட்ரோ ரயில்நிலையங்களில் நெட்வொா்க் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. நெட்வொா்க் சேவை வழங்குபவரை கண்டறிவதில் ஏற்பட்ட தாமதம் தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த வசதி பயணிகளுக்கு வழங்க மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.