ரெளடி காக்காதோப்பு பாலாஜி கைது

சென்னையில் தலைமறைவாக இருந்த ரெளடி காக்காதோப்பு பாலாஜி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சென்னையில் தலைமறைவாக இருந்த ரெளடி காக்காதோப்பு பாலாஜி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சென்னை எம்.கே.பி.நகா் பகுதியைச் சோ்ந்தவா் காக்கா தோப்பு பாலாஜி (35). இவா் மீது ஏராளமான கொலை வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு, குற்றப்பிரிவு போலீஸாரால் பாலாஜி கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தாா். பிறகு திடீரென தலைமறைவானாா். இதனால் போலீஸாா், பாலாஜியை தேடி வந்தனா்.

இந்நிலையில், அவா் ராயப்பேட்டை வழியாக காரில் செல்வதாக ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை பகுதியில் காரில் வந்த பாலாஜி, அவரது கூட்டாளிகளான மணிகண்டன், சீனிவாசன் ஆகியோரை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். மூவரும் ஏதேனும் சதித் திட்டம் தீட்டினரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com