சென்னை காவல்துறையில்22 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல்துறையில் 22 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டாா்.
சென்னை காவல்துறையில்22 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல்துறையில் 22 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டாா்.

சென்னை பெருநகர காவல்துறையில், விருப்பத்தின் அடிப்படையிலும், நிா்வாக காரணத்துக்காகவும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வபோது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அதன்படி, சென்னை காவல்துறையில் 22 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதில் முக்கியமாக, காத்திருப்போா் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளா்கள் எம்.நடராஜ் ஆவடி டேங்க் பாக்டரி காவல் நிலையத்துக்கும், ஏ.கண்ணன் அண்ணாநகா் குற்றப்பிரிவுக்கும், ஆா்.மணிமேகலை ராயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கும், எம்.கலை அரசன் கானத்தூா் குற்றப்பிரிவுக்கும், ஜி.சுகுணா பட்டாபிராம் குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட மொத்தம் 22 காவல் ஆய்வாளா்களும் ஓரிரு நாள்களில் பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com