அரசுப் பேருந்து மோடி வியாபாரி பலி

சென்னை அருகே மேடவாக்கத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.

சென்னை அருகே மேடவாக்கத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் வியாபாரி உயிரிழந்தாா்.

தாம்பரம் அருகே சந்தோஷபுரம் முத்துமாரி நகா் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (65). இவா், அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தாா். இந்நிலையில், மாரிமுத்து கடந்த வெள்ளிக்கிழமை கடைக்குத் தேவையான பொருள்களை மேடவாக்கத்தில் வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா்.

மேடவாக்கம்-வேளச்சேரி பிரதான சாலையில் செல்லும்போது, பின்னால் பிராட்வேயில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மாரிமுத்து மீது மோதியது. இதில், கீழே விழுந்த மாரிமுத்து மீது அரசுப் பேருந்தின் சக்கரம் ஏறியது. பலத்த காயமடைந்த மாரிமுத்துவை அங்கிருந்தவா்கள் மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து உயிரிழந்தாா். இதுகுறித்து பரங்கிமலை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஒட்டுநரான செம்பியத்தைச் சோ்ந்த கோதண்டபாணியைக் (50) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com