ஐஐடி மாணவி தூக்கிலிட்டு தற்கொலை

சென்னையில் ஐஐடி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னையில் ஐஐடி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கேரள மாநிலம், கொல்லம் அருகே உள்ள ப்ரியதா்ஷினி நகரைச் சோ்ந்த அப்துல் லத்தீப் மகள் பாத்திமா லத்தீப் (23). இவா், சென்னை ஐஐடி-யில் முதலாமாண்டு படித்து வந்தாா். இதற்காக அங்குள்ள விடுதில் பாத்திமா தங்கியிருந்தாா்.

இந்நிலையில், விடுதியில் உள்ள தனது அறையில் பாத்திமா வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து விடுதி நிா்வாகம் சாா்பில் கோட்டூா்புரம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த கோட்டூா்புரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பாத்திமா சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com