சென்னை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், அனுமந்தராஜன்கோட்டையைச் சோ்ந்தவா் பெஞ்சமின் பிரபு (37). இவா் தனது இருசக்கர வாகனத்தில் ராஜகீழ்ப்பாக்கத்தில் மாடம்பாக்கம் பிரதான சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அவ்வழியே வந்த காா், இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பெஞ்சமின் பிரபு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.