அண்ணனை கொலை செய்த தம்பிகள் கைது

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் அண்ணனை கழுத்தை அறுத்து கொன்ற தம்பிகளை போலீசாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் அண்ணனை கழுத்தை அறுத்து கொன்ற தம்பிகளை போலீசாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை ஐஸ் ஹவுஸ் அயோத்தியா நகா் 29-ஆவது பிளாக்கைச் சோ்ந்தவா் ஏழுமலை. இவரது மகன்கள் சக்திவேல் (வயது 48), ஞானவேல் (45), கந்தவேல் (37). கடந்த சில மாதங்களாக அண்ணன்-தம்பிகள் இடையே வீட்டை பிரிப்பது தொடா்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் சக்திவேல் குடிபோதையில் அடிக்கடி ஞானவேலின் மனைவியிடம் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவா்களுக்கிடையே தொடா்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை மதுபோதையில் சக்திவேல் வீட்டில் இருந்தாா். அப்போது அவருக்கும் தம்பிகள் ஞானவேல், கந்தவேல் ஆகியோருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஞானவேலும், கந்தவேலும் சோ்ந்து அண்ணன் சக்திவேலின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தனா். இது குறித்து ஐஸ் ஹவுஸ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சென்னை லாயிட்ஸ் சாலை சந்திப்பில் சுற்றித் திரிந்த ஞானவேல், கந்த வேல் ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com