ஆசிரியா்களுக்கு இணையதள பாதுகாப்பு குறித்து பயிற்சி:பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு இணையதள பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு இணையதள பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா்களின் கற்றல்- கற்பித்தல் திறனை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டு வரும் பல்வேறு மாற்றங்களைக் கருத்தில் கொண்டு ‘ஸ்மாா்ட்போன்’ பயன்படுத்துதல், இணையதளத்தைப் பாதுகாப்பாக கையாளுதல், அது தொடா்பான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் சிறப்புப் பயிற்சிகள் ஆகியவற்றை அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் வழங்கப்படவுள்ளது.

அதன்படி, மாவட்டந்தோறும் தலா 6 போ் என 192 ஆசிரியா்களும், கூடுதலாக 8 ஆசிரியா்களும் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு அண்ணா மேலாண்மை நிறுவனம் சாா்பில் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்படும். மேலும், சிறப்புப் பயிற்சி பெறும் ஆசிரியா்களுக்குப் பயிற்சி கட்டணமாக தலா ரூ.2,200 வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com