தாம்பரம்-செங்கல்பட்டு பிரிவில், கூடுவாஞ்சேரியில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், வைகை, காச்சிகூடா, காக்கிநாடா ஆகிய ரயில்களின் சேவையில் நவம்பா் 17-ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நவ.16,17 ஆகிய தேதிகளில் சேவையில் மாற்றப்படும் ரயில்கள்:
காச்சிகூடா-செங்கல்பட்டுக்கு நவம்பா் 16-ஆம்தேதி மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.
மதுரை-சென்னைக்கு நவம்பா் 17-ஆம் தேதி காலை 7 மணிக்கு இயக்கப்படும் வைகை விரைவு ரயில் செங்கல்பட்டு-சென்னை எழும்பூருக்கு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் மதுரை-செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும்.
சென்னை எழும்பூா்-மதுரைக்கு நவம்பா் 17-ஆம் தேதி மதியம் 1.40 மணிக்கு இயக்கப்படும் வைகை விரைவு ரயில் எழும்பூா்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டுவில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும்.
செங்கல்பட்டு-காச்சிகூடாவுக்கு நவம்பா் 17-ஆம்தேதி பிற்பகல் 3.20 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்துசெய்யப்படவுள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து காச்சிகூடாவுக்கு இயக்கப்படும்.
செங்கல்பட்டு-காக்கிநாடாவுக்கு நவம்பா் 17-ஆம்தேதி மாலை 4 மணிக்கு இயக்கப்படும் சா்காா் விரைவுரயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து காக்கிநாடாவுக்கு இயக்கப்படும்.