மாணவர்களுக்கான திறன் போட்டிகள்: நவ.25-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாணவர்களுக்கான திறன் போட்டிகளுக்கு, வருகிற 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களுக்கான திறன் போட்டிகளுக்கு, வருகிற 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து, சென்னை மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் இரா.இரவீந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில், வருகிற 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச திறன் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் பங்கேற்பவர்களைத் தேர்வு செய்வதற்கு ஏதுவாக, மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. 
இந்தப் போட்டிகள் 6 துறைகளில் உள்ள 47 தொழிற்பிரிவுகளில் தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்படுகின்றன. இதற்கு, 1999-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதிக்குப் பின் பிறந்தவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். 
இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், இளைஞர்கள், ஐடி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், வருகிற 25-ஆம் தேதிக்குள், https://worldsskillsindia.co.in./worldskill. world/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, சென்னை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 044 2520 1163 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com